கடலில் குளித்தபோது மனைவி கண்முன்னே ராட்சத அலையில் சிக்கி கணவன் பரிதாப பலி: கோவளத்தில் சோகம்


திருப்போரூர்: கோவளம் கடலில் குளித்துக்கொண்டிருந்தபோது, மனைவி கண்முன்னே ராட்ச அலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி கணவன் பரிதாபமாக பலியானார். சென்னை பெரம்பூர் அடுத்த திருவிக நகரை சேர்ந்தவர் கார்த்திக் (27). இவர், மே தினத்தன்று, விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் அவரது மனைவி சசிகலா மற்றும் உறவினர்களுடன் சுற்றிப்பார்ப்பதற்காக கோவளம் வந்தார். பின்னர், நீலக்கொடி கடற்கரையில் சுற்றிப்பார்த்துவிட்டு, அனைவரும் கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, ராட்சத அலையில் சிக்கி கார்த்திக் இழுத்து செல்லப்பட்டார். இதனை கண்டு, அதிர்ச்சியடைந்த அவரது மனைவி, உறவினர்களும் கூச்சலிட்டனர்.

சத்தம் கேட்டு வந்த கடற்கரையில் இருந்த மீனவர்கள், படகை எடுத்துகொண்டு கடலில் இறங்கி மயங்கியநிலையில் கார்த்திகை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருப்போரூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, கார்த்திக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த கேளம்பாக்கம் போலீசார், கார்த்திக்கின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கடலில் குளித்தபோது மனைவி கண்முன்னே ராட்சத அலையில் சிக்கி கணவன் பரிதாப பலி: கோவளத்தில் சோகம் appeared first on Dinakaran.

Related Stories: