மதுரை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.அமெரிக்கா சென்றிருந்த துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் கட்சிகளை துவக்கலாம். யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவிற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அமெரிக்காவிற்கு அரசு முறை பயணமாக சென்று வந்தேன். அங்கு தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கு அமெரிக்கா வாழ் தமிழர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து தொழில் துவங்குவது குறித்து பேசினேன். அவர்கள் இங்கே தொழில் தொடங்க மிகவும் ஆர்வமாக உள்ளனர்.உலக வங்கியிடம் தமிழக வளர்ச்சித்திட்டங்கள் குறித்து பேசியுள்ளேன். அதுதொடர்பாக தமிழகம் வந்து பார்வையிட சம்மதம் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா பயணம் முழு வெற்றி பெற்றுள்ளது. மேலவளவு குற்றவாளிகளை விடுவித்ததில் நீதிமன்றம் தங்களுடைய கருத்துகளை கூறியுள்ளது. அதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.