கரீம்நகர்: தெலுங்கானாவில் தாசில்தார் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில், இன்று வருவாய் ஊழியர்கள் மீது விவசாயி ஒருவர் பெட்ரோல் ஊற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள கரீம் நகர் மாவட்டத்தில் சிகுருமமிடி தாசில்தார் அலுவலகமானாது அமைந்துள்ளது. லம்படிபள்ளி பகுதியை சேர்ந்த விவசாயி கங்கைய்யா, கையில் பெட்ரோலுடன் இன்று தாசில்தார் அலுவலகத்திற்கு வந்துள்ளார். தமது நிலப்பிரச்சனையானது கடந்த 3 ஆண்டுகளாக தீர்க்கப்பட்டாமல் இருப்பதால் மிகவும் ஆத்திரத்தில் இருந்த அவர், வருவாய் அதிகாரி அறையில் இருந்த கணினி மற்றும் கோப்புகள் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயற்சி செய்துள்ளார். இதனால் பதற்றமடைந்த அதிகாரிகள் விவசாயி கங்கைய்யாவை தள்ளிவிட்டுள்ளனர். அப்போது, ராஜன்னா, அனிதா, திவ்யா மற்றும் சந்தர் ஆகிய ஊழியர்கள் மீது பெட்ரோல் விழுந்துள்ளது.