மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் எட்டிமங்கலத்தை சேர்ந்த வக்கீல் ஸ்டாலின், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இதேபோல், அய்யாத்துரை மற்றும் சத்தியமூர்த்தி ஆகியோரும் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல் ஆனந்தமுருகன் ஆஜராகி, ‘‘தேர்தல் நடவடிக்கைகள் முடிந்து, நவம்பர் முதல் வாரத்தில், புதிய நிர்வாக குழுவின் முதல் கூட்டம் நடக்கும் என ஏற்கனவே இந்த நீதிமன்றத்தில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தேர்தலுக்கான எந்த நடவடிக்கையும் இல்லை’’ என்றார்.