ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தப்பட்ட ரயில் சேவை 3 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் தொடங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ரயில்சேவை ரத்து செய்யப்பட்டது.