சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே துவர்க்குளத்தில் பள்ளி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் அபாய நிலையில் காணப்படும் கிணற்றை மூட வேண்டும் என கிராமமக்கள் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் கொம்பன்குளம் ஊராட்சிக்குள்பட்ட துவர்க்குளத்தில் உள்ள ஆர்.சி தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் அபாயமான நிலையில் பாழடைந்த திறந்த நிலையில் கிணறு காணப்படுகிறது. இதன் அருகில் பள்ளி மாணவர்களும், குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடிப்பவர்களும் வந்து செல்கின்றனர்.