கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்

சென்னை: கள்ளக்குறிச்சி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பட்டை ஆகிய 5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சிறப்பு அதிகாரிகளாக பணியாற்றிய 5 பேரையும் மாவட்ட ஆட்சியர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண்குமார், தென்காசி ஆட்சியராக ஜிகே. அருண் சுந்தர் தயாளன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ், திருப்பத்தூர் ஆட்சியராக சிவன் அருள், மற்றும் ராணிப்பேட்டை ஆட்சியராக திவ்யதர்ஷினி ஆகியோரை நியமித்து தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related Stories: