மதுரை: திருச்சி மாவட்டம், திருவரங்கம், உத்தமர்சீலியை சேர்ந்த விஜயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் முக்கொம்பூரில் பிரிந்து கல்லணையில் ஒன்று சேர்கிறது. கொள்ளிடத்தில் தடுப்பணைகள் ஏதும் இல்லை. இதனால் ஆற்று நீர் முழவதும் தஞ்சாவூர் வழியாக சென்று கடலில் கலக்கிறது. எனவே, திருச்சி, திருவரங்கம் அருகே காவிரி ஆற்றின் குறுக்கே உத்தமர்சீலிக்கும் வேங்கூருக்கும் இடையே ஒரு தடுப்பணையும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கிளிக்கூடுக்கும், இடையாற்றுமங்கலத்துக்கும் இடையே ஒரு தடுப்பணையும் அமைத்தால், 5,000 ஏக்கருக்கு பாசன வசதி கிடைக்கும். எனவே, இந்தப்பகுதியில் இரு தடுப்பணைகள் கட்டுமாறு உத்தரவிட வேண்டும்என கூறியிருந்தார்.