சான் பிரான்சிஸ்கோ: ஆபாசமான மற்றும் தவறான தகவல்கள் வெளியிட்ட 5.4 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகளை அந்நிறுவனம் நீக்கி உள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் வெளியிட்டுள்ள தகவலில், ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற போலி கணக்குகளை கண்டறிந்து நீக்கி வருகிறோம் என தெரிவித்துள்ளது. ஆபாசமான மற்றும் தவறான தகவல்கள் பதிவிடப்படும் கணக்குகள், சமூக வலைதள பாதுகாப்பு அடிப்படையில் நீக்கப்பட்டு வருகிறது என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு 5.4 பில்லியன் பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன என கூறப்பட்டுள்ளது. ஆனால் நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே புதிய கணக்குகள் உருவாக்கப்படுகிறது எனவும் தெரிவித்தது. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.