திருமலை: ஆந்திராவின் குண்டூர் மாவட்டம் வெலகம்பூண்டியில் உள்ள தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. பின்னர், செய்தித் துறை அமைச்சர் பேர்னி நானி கூறியதாவது:மாநிலம் முழுவதும் மணல் கடத்தல் மற்றும் அரசு நிர்ணயித்த தொகையை காட்டிலும் அதிக விலைக்கு விற்பனை செய்தால் 2 லட்சம் வரை அபராதம், 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும், முறைகேடாக மணல் பதுக்கி வைப்பது, மொத்த விற்பனை செய்வது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வி கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 37.21 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர்.