காபூல்: ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகமானது தலைநகர் காபூலில் உள்ள கசாபா பகுதியில் அமைந்துள்ளது. காலை நேரம் என்பதால் பரபரப்பாக இயங்கி வந்த இப்பகுதி சாலையில், திடீரென கார் குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். சக்திவாய்ந்த இந்த வெடிகுண்டு தாக்குதலால் அப்பகுதியில் புகை சூழ்ந்து காணப்பட்ட நிலையில், அருகில் இருந்த கட்டிடங்கள், கடைகள் மற்றும் வாகனங்களும் சேதமடைந்துள்ளன. இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் நஸ்ரத் ரஹிமி, கசாபாவின் சரக்-இ-காசிம் வட்டாரத்தில் உள்ளூர் நேரப்படி காலை 7:25 மணியளவில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.