விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் வாகன தணிக்கையின் போது போலீஸ் தாக்கியதில் மூதாட்டி அய்யம்மாள் உயிரிழந்த விவகாரத்தில் 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி வாகன சோதனையில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். பயிற்சி எஸ்.ஐ. ஆய்வாளர் வேல்முருகன், சிறப்பு எஸ்.ஐ. மணி, காவலர்கள் செல்வம், இளையராஜா, சந்தோஷ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி - கச்சிராயப்பாளையம் சாலையில் தீயணைப்புத்துறை அலுவலகம் அருகே 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக உலகங்காத்தான் கிராமத்தைச் செந்தில்குமார் என்ற இளைஞர் அவருடைய தாயார் அய்யம்மாள் (55) என்பவரை அழைத்து கொண்டு சென்றார். அச்சமயம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் வாகனத்தை நிறுத்த முயற்சித்தனர்.