சோனியாவுக்கு பாதுகாப்பு வாபஸ் மூர்க்கத்தனமானது; பைத்தியக்காரத்தனம்: ப.சிதம்பரம் ஆவேசம்

புதுடெல்லி: ‘காங்கிரஸ் தலைவர் சோனியாவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு கமாண்டோ படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட செயல் மூர்க்கத்தனமானது,’ என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம், தனது குடும்பத்தினர் மூலம் டிவிட்டரில் கருத்துக்களை  பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு இதுவரை வழங்கப்பட்ட சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்பிஜி) பாதுகாப்பை  நேற்று முன்தினம் மத்திய அரசு திடீரென வாபஸ் பெற்றது. இதற்கு, காங்கிரஸ் கடும்  கண்டனம் தெரிவித்தது. அதில் `பாஜ.வின் இந்த முடிவு அரசியல் பழிவாங்கும் செயல்’ என குற்றம்சாட்டியது. இந்நிலையில், நேற்று ப.சிதம்பரம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், `காந்தி குடும்பத்திற்கு வழங்கப்படும் எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெறுவது என்ற மத்திய அரசின் முடிவு மூர்க்கத்தனமானது, பைத்தியக்காரத்தனமானது,’ என ஆவேசமாக  குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: