கல்லூரி விடுதியில் வார்டன் கொலை மாணவன் கைது

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தனியார் வேளாண் கல்லூரியில் பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கட்ராமன்(48) என்பவர் வார்டனாக வேலை பார்த்து வந்தார். இக்கல்லூரியில் 2ம்ஆண்டு படிக்கும் மாணவர் அப்துல்ஹக்கீம் (19)  விடுதியில் தங்கி படித்து வருகிறார். இவரது நடவடிக்கை சரியில்லை என்று தந்தைக்கு வார்டன் வெங்கட்ராமன் போன் செய்து கூறியுள்ளார். 2 நாட்களுக்கு முன்பு அவர் வந்து மகனை கண்டித்துவிட்டு சென்றாராம். இதனால் ஆத்திரமடைந்த  அப்துல்ஹக்கீம் நேற்றுமுன்தினம் வெங்கட்ராமனை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின்படி ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிந்து மாணவன் அப்துல் ஹக்கீமை கைது செய்தனர். நேற்று  மாலை அவரை  துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: