லண்டன்: இந்தியாவுக்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என வைர வியாபாரி நிரவ் மோடி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அங்கு எனக்கு நியாயம் கிடைக்காது எனவும் அவர் கூறியுள்ளார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக தலைமறைவாக இருந்த இவர் லண்டலின் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் நீரவ் மோடி ஐந்தாவது முறையாக பெயில் வேண்டும் என்று லண்டன் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருக்கிறார். 4 முறை இவரின் மனுவை நீதிமன்றம் நீராகரித்துவிட்டது. அதனால் தாம் கடுமையான பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி 5வது முறையாக நிரவ் மோடி தாக்கல் செய்தார்.