முதல்வர் பதவி மட்டும் போதும்: சிவசேனா பதிலடி

மும்பை: சிவசேனா கட்சி மூத்த தலைவரான சஞ்சய் ராவத், மும்பையில் நேற்று மாலை ஆளுநரை சந்தித்து பேசினார். அவருடன் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரும், மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான ராம்தாஸ் கதம் உடன் சென்றார். இந்த சந்திப்பின் போது, மகாராஷ்டிராவில் புதிய அரசு பதவியேற்பதற்கு சிவசேனா தடைக்கல்லாக இருக்காது என்று ஆளுநரிடம் சஞ்சய் ராவுத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆளுநரை சந்தித்த பிறகு பேட்டியளித்த சஞ்சய் ராவுத், ‘‘மரியாதை நிமித்தமான சந்திப்பு இது. சிவசேனாவுக்கு பாஜ தர முன்வந்துள்ள 8 கேபினட் அமைச்சர் பதவி, 8 இணையமைச்சர் பதவி தேவையில்லை. அதை பாஜ வைத்துக் கொள்ளட்டும். எங்களுக்கு முதல்வர் பதவி மட்டும் போதும்’’ என்று கூறினார்.

Related Stories: