பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே தென்சங்கம்பாளையம் பகுதியில் கோட்டூர் எஸ்.ஐ. சம்பந்தம் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு பைக்கில் 3 பேர் வந்துள்ளனர். இதை பார்த்த போலீசார் பைக்கை நிறுத்த சைகை காட்டினர். ஆனால் அவர்கள் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. உடனே போலீஸ்காரர் ஒருவர் லத்தியை பைக் மீது வீசியுள்ளார். இதனால், பைக் கட்டுப்பாட்டை இழந்து, அப்பகுதியில் நின்றிருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது. இதில், பைக்கில் வந்த கோவை போத்தனூரை சேர்ந்த சென்பார் (18), குனியமுத்தூரை சேர்ந்த அப்சல் (17). சர்தார் (25) ஆகியோர் படுகாயமடைந்தனர்.