கோவை: கோவையில் முதன்முதலாக பாதாள சாக்கடை மற்றும் மனிதக்கழிவுகளை அகற்ற ரோபோ இயந்திர செயல்பாடு நேற்று துவக்கி வைக்கப்பட்டது. கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தெற்கு மண்டலம், சலீவன் வீதி, மாநகராட்சி மாரண்ண கவுடர் உயர்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடந்தது. உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.