சென்னை: எந்த மொழியை தமிழர்கள் மீது திணித்தாலும் எதிர்ப்போம் என்றார் கனிமொழி எம்பி. சென்னை விமான நிலையத்தில் திமுக எம்பி கனிமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நடிகர் ரஜினிகாந்துக்கு மத்திய அரசு விருது அறிவித்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு தொடர்ந்து தமிழ் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதுபோல் செயல்படுகிறது. முதலில் மத்திய அரசு இந்தியை திணிப்பதை நிறுத்தினால் தமிழுக்கு மட்டுமல்ல அனைத்து மொழிகளுக்குமே அவர்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய நன்மையாக இருக்கும். மத்திய அரசு எல்லா மொழிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் தரவேண்டும். தமிழுக்கு மற்ற மொழிகளுக்கு தரும் முக்கியத்துவம் தருவதுபோல் தமிழுக்கும் தருவது வரவேற்கக்கூடியது.