திரைப்பட சிறப்பு காட்சிகளுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். குழந்தை சுஜித் மரணம் பொது இடத்தில் நடந்த விபத்து கிடையாது. தனிநபர் இடத்தில் பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்தது. புத்தாண்டு பிறப்பதற்குள் பத்திரிகையாளர் நலவாரியக்குழு அமைக்கப்படும். ஒரு காட்சிக்கு அனுமதி பெற்று கூடுதல் கட்டணத்துடன் 2,3 காட்சிகள் திரையிடுவதாக புகார்கள் வந்தன.

அதனால்தான் தீபாவளிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை என அறிவித்தோம். பலர் ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டோமென தெரிவித்ததால் ஒரு காட்சிக்கு மட்டும் அனுமதித்தோம். இனி சிறப்பு காட்சியுடன் சிறப்புக்கட்டணத்தை அரசே நிர்ணயித்து வெளிப்படையாக அறிவிக்கும். அந்த நிபந்தனை அடிப்படையில்தான் வசூலிக்கப்படும். பொங்கலுக்குள் ஆன்லைன் டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்படும்போது, மக்களுக்கு வெளிப்படையான கட்டணம், அரசுக்கும் வருமானம் வரும் வகையில் செயல்படுத்தப்படும் என்றார்.

Related Stories: