திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். குழந்தை சுஜித் மரணம் பொது இடத்தில் நடந்த விபத்து கிடையாது. தனிநபர் இடத்தில் பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்தது. புத்தாண்டு பிறப்பதற்குள் பத்திரிகையாளர் நலவாரியக்குழு அமைக்கப்படும். ஒரு காட்சிக்கு அனுமதி பெற்று கூடுதல் கட்டணத்துடன் 2,3 காட்சிகள் திரையிடுவதாக புகார்கள் வந்தன.