சென்னை: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான யு-16 கிரிக்கெட் போட்டி, சென்னையில் மேடவாக்கத்தில் நடந்தது. இதன் இறுதிப் போட்டியில் மாம்பலம் ஸ்ரீஅகோபில மடம் மேனிலைப்பள்ளியும், திருமழிசை சென்னை பப்ளிக் ஸ்கூல் அணியும் மோதின. முதலில் விளையாடிய சென்னை பப்ளிக் ஸ்கூல், 40 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 207 ரன் எடுத்தது. அந்த அணியை சேர்ந்த எஸ்.ஹர்ஷித் 55 ரன், எல்.கே.தருண் 49 ரன் எடுத்தனர். ஸ்ரீஅகோபிலம் பள்ளியை சேர்ந்த வி.பிரேம்குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.பிறகு விளையாடிய ஸ்ரீஅகோபிலம் பள்ளி, 37.2 ஓவரில் எல்லா விக்கெட்டையும் இழந்து 182 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், 25 ரன் வித்தியாசத்தில் சென்னை பப்ளிக் ஸ்கூல் அணி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.