ஆந்திர கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு

திருமலை: ஆந்திர கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகப்பட்டினத்தை சேர்ந்த  மீனவர்கள் 9 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் சென்னபாளையம் கடல் பகுதியில் ஆந்திர மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.  அப்போது அப்பகுதியில் வேறு ஒரு படகில் வந்த சிலர் இவர்களின் பகுதியில் மீன்பிடித்தனர்.

உடனே அந்த படகை ஆந்திர மீனவர்கள் சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது, நாகப்பட்டினத்தை சேர்ந்த 9 மீனவர்கள் எனவும், இவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை எல்ைல தாண்டி மீன் பிடிக்கக்கூடாது என எச்சரித்து காவலி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: