திருமலை: ஆந்திர கடல் பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 9 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். ஆந்திராவின் நெல்லூர் மாவட்டம் சென்னபாளையம் கடல் பகுதியில் ஆந்திர மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வேறு ஒரு படகில் வந்த சிலர் இவர்களின் பகுதியில் மீன்பிடித்தனர்.