திருமலை: சித்தூர் மாவட்டம் பாலசமுத்திரம் மண்டலம் நரசிம்மபுரம் பஞ்சாயத்து டி.என்.ஆர்.புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணம் ராஜூ மகள் சந்திரகலா என்கிற காவியா(18). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒருவருடன் கடந்த 30ம் தேதி திருமணம் நடத்த நிச்சயிருந்தனர். ஆனால் கடந்த ஒரு வாரமாக காவ்யாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அவரை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு டெங்கு இருப்பது தெரியவந்தது. இதனால் நிச்சயித்த தேதியில் திருமணம் நடத்த முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அரசு டாக்டர்கள் அனுமதி தரவில்லை. இதையடுத்து திருமணம் தற்காலிகமாக நிறுத்திவைத்திருந்தனர்.