மேட்டூர்: கர்நாடகாவில் மழை குறைந்து அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று இரவு 7,500 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து நீர்மின் நிலையம் வழியாக 7,500 கனஅடி திறக்கப்படுகிறது.