கோவை: காற்றாலை மோசடி வழக்கில் நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி கோவை 6 வது குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோவையில் ஜே.சி.எம்.எஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை சரிதா நாயர், காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் என்பவரிடம் ரூபாய் 28 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் உதகையை சேர்ந்த வெங்கட்ராமன், ஜோயோ ஆகியோரும் சரிதாவிடம் ரூபாய் 5.5 லட்சம் தந்ததாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக சரிதா நாயர், முன்னாள் கணவர் பிஜு ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் மீது கோவையில் 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் 2009ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.