வேலூர்: நெமிலி பாலா பீடத்தில் கந்தசஷ்டி விழா தொடங்கியது. பீட நிர்வாகி மோகன்ஜி வள்ளி, தெய்வானை உடனுறை முருகனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்தார். விழாவின் சிறப்பு அம்சமாக பாலா பீடாதிபதி நெமிலி எழில்மணி எழுதி சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பாடியுள்ள ‘சிந்தையெல்லாம் அந்த கந்தன்வசம் நெஞ்சம் சிந்திப்பதும் கந்த சஷ்டி கவசம்’ என்ற சிறப்பு குறுந்தகட்டின் மறு வெளியீட்டு விழா நடந்தது.