திருவனந்தபுரம் : சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடம் மண்டல பூஜைகளுக்காக வரும் நவ. 16ம் தேதி நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி ஆன்லைன் தரிசன முன்பதிவை முன்னதாகவே தொடங்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன்பு முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது.