டெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக இடைக்கால ஜாமின் கோரி ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமின் வழங்குமாறு ப.சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார். சிதம்பரத்தை மேலும் 1 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியுள்ளது. அமலாக்கத்துறை சார்பில் சிதம்பரத்தின் தற்போதைய உடல்நிலை குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவரால் சிறையில் இருந்து தற்போது வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சிறையில் உள்ள ப.சிதம்பரத்திற்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது.