அமெரிக்கா: ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் பாக்தாதியை கொல்ல உதவிய உளவாளிக்கு இந்திய மதிப்பில் 177 கோடி ரூபாய் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. சர்வதேச பயங்கரவாதியான பாக்தாதியின் தலைக்கு சுமார் 177 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவித்து அமெரிக்கா தேடி வந்தது. இந்தநிலையில், சிரியாவில் பதுங்கியிருந்த பாக்தாதியை, கடந்த 26ம் தேதி அமெரிக்கா ராணுவம் சுற்றிவளைத்தபோது, உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்து பாக்தாதி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.