சென்னை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் போடப்பட்டு, பயன்படாத ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்துக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற வாரிய பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் இறந்தான். இந்நிலையில், பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை முறைப்படி மூடாமல் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ஆழ்துளை கிணறு, திறந்தவெளி கிணறு ஆகியவை செயல்படாமல் இருந்தால் அவை பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும். இதில் குழந்தைகள், ஆடு, மாடு ஆகியவை விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதை உடனடியாக மூட வேண்டும். தவறும் பட்சத்தில் வாரிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடப்படுகிறது.
பயன்படாத ஆழ்துளை கிணறுகளை 24 மணி நேரத்துக்குள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற வேண்டும்: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- கிணறுகள்
- மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்
- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் நடவடிக்கை
- தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்