மும்பை: ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 300 விமானங்களை வாங்குவதற்கான இண்டிகோ நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ஏ320 நியோ ரக விமானங்களை வாங்க இண்டிகோ விமான சேவை நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 2 லட்சத்து 33 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 300 விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் தயாராகி வருவதாகவும் தெரிகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்திற்கான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாகவும், ஏர்பஸ் நிறுவனத்தின் நவீன ரக விமானங்களும் இந்த ஒப்பந்தத்தின்படி வாங்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த தகவலை உறுதி செய்ய ஏர்பஸ் நிறுவனம் மறுத்துள்ளது.