தலைமை காவலர் மயங்கி விழுந்து பலி

சென்னை: நுங்கம் பாக்கம்  புஷ்பா நகரை சேர்ந்தவர் நரேந்திரகுமார் (47). கடந்த  ஓராண்டாக கோயம்பேடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்,  நேற்று முன்தினம் தீபாவளியை முன்னிட்டு, சி.செக்டார்  பகுதியில் பைக்கில் ரோந்து பணியில்  ஈடுபட்டு இருந்தார். அப்போது, திடீரென மயக்கம் ஏற்பட்டதால் திடீரென சுருண்டு கீழே  விழுந்தார். அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு சாலிகிராமத்தில் உள்ள தனியார்  மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்  பரிசோதித்துவிட்டு அவர் வரும்  வழியிலேயே இறந்துவிட்டார் என்று கூறினார்.  இதுகுறித்து கோயம்பேடு போலீசார்  விசாரிக்கின்றனர்.

Related Stories: