வாஷிங்டன் : இந்தியா மற்றும் பாகிஸ்தான் கேட்டுக் கொண்டால் இரு நாடுகள் இடையே சமரசம் செய்து வைக்க தயார் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. காஷ்மீர் பிரச்சனையில் இரு நாடுகள் இடையே எழுந்துள்ள பதற்றத்தை தணிக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விரும்புவதாக அந்நாட்டு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அண்மையில் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேரடியாக பேசியதை அவர் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் பிரச்சனையில் 3வது நாட்டின் சமரசத்தை ஏற்க மாட்டோம் என்று இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டதை அமெரிக்க அதிகாரி சுட்டிக் காட்டியுள்ளார்.