டாக்கா: வங்காளதேச கிரிக்கெட் வீரர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு இந்தியாவுடனான டி20 மற்றும் டெஸ்ட் தொடர் போட்டிகளில் விளையாடுவது உறுதியானது. கடந்த இரண்டு நாட்கள் முன்பு வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்கள் ஷகிப் அல் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மக்மதுல்லா உள்ளிட்டோர், வங்கதேச தலைநகர் டாக்காவில் செய்தியாளர்களை சந்தித்தனர். அவர்கள் 13 அம்ச கோரிக்கை ஒன்றை முன் வைத்தனர். அதில், சம்பள உயர்வு, பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரை உரிமையாளர்கள் கொண்டு நடத்துவது உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்று இருந்தன. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை உள்ளூர் போட்டிகள் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் வரை எந்த கிரிக்கெட் போட்டிகளிலும் யாரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தனர். வீரர்கள் ஸ்ட்ரைக்கில் குதித்ததால் உள்ளூர் முதல் தர போட்டிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. மறுபுறம், வரும் நவ. 3ம் தேதி முதல் இந்தியா - வங்கதேச டி20 தொடர் நடக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.