சென்னை: சாலையோரம் இருந்த தள்ளுவண்டி கடையை அடித்து உடைத்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சிவராஜன் மீது பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை பெரியமேடு காவல் எல்லைக்குட்பட்ட சாமி தெருவில் அப்துல் ரகுமான் என்பவர் தள்ளுவண்டி கடை நடத்தி வந்தார். இந்த கடையால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக கடந்த பிப்ரவரி 9ம் தேதி இரவு 11 மணி அளவில் பெரியமேடு இன்ஸ்பெக்டராக பணியாற்றிய சிவராஜன் சக போலீசார் உதவியுடன் உருட்டுக்கட்டையால் அடித்து உடைத்தார். இந்த சம்பவத்திற்கான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அதைதொடர்ந்து தள்ளுவண்டி கடை உரிமையாளர் அப்துல் ரகுமான் சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிசிடிவி பதிவு மூலம் புகாரளித்தார். ஆனால் புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.