சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்டது. இதில், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு, அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பட்டாசு, இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில், மாநில நிர்வாகிகள் பொன்.கிருஷ்ணமூர்த்தி, கீழானூர் ராஜேந்திரன், நாஞ்சில் பிரசாத், மாவட்ட தலைவர் ஏ.ஜி.சிதம்பரம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஆரூண், கடல் தமிழ்வாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: