சிவகங்கை மாவட்டத்தில் இன்று முதல் 144 தடை

சிவகங்கை:சிவகங்கை மாவட் டத்தில் இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நாளை (அக். 24) திருப்பத்தூரிலும், அக். 27ல் காளையார்கோவிலிலும் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடக்கிறது. அக். 30ல் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதையொட்டி இன்று (அக். 23) காலை முதல் அக். 31 வரை சிவகங்கை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார். இந்த நாட்களில் உரிய அனுமதியின்றி பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் நேற்று முதல் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

Related Stories: