செய்யாறு: செய்யாறு அருகே போலீசார் துரத்தியபோது பிரபல ரவுடி கிணற்றில் விழுந்து பலியானார். மதுரை மாவட்டம் சோலை அழகுபுரத்தை சேர்ந்தவர் பாட்டில் மணி(32). இவனது கூட்டாளி திருநெல்வேலி அடுத்த காழியூத்து கிராமத்தை சேர்ந்த குண்டு கார்த்திக்(35). இவர்கள் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரபல ரவுடிகள். இவர்களை சென்னை செங்குன்றம் போலீசார் வழக்கில் தேடி வந்தனர். இந்நிலையில், கொலை வழக்கு ஒன்றில் தனிப்படை போலீசார் பாட்டில் மணியை தேடி வந்த நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் காஞ்சிபுரம் போலீசார் உதவியுடன் பாட்டில் மணியை தேடி வந்தனர். 10க்கும் மேற்பட்டோர் ஒரு காரில் தூசி நோக்கி சென்றனர்.