நாமக்கல்: நாமக்கல்லில் 100 செலுத்தினால் நிலம் தருவதாக கூறி, தனியார் நிறுவனம் 75 கோடி வரை மோசடி செய்துள்ளதாக கூறி, பாதிக்கப்பட்டவர்கள் திரண்டு வந்து நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு, நேற்று பாண்டமங்கலம், பரமத்திவேலூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். பின்னர், அவர்கள் கலெக்டர் மெகராஜை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதன் விவரம் வருமாறு:மதுரையை தலைமையிடமாக கொண்டு கடந்த 2006ல், ஒரு தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது. 49 பங்குதாரர்கள் இந்த நிறுவனத்தில் அங்கத்தினர்களாக இருந்தனர். இந்த நிறுவனத்தில் மாதம் 100 வீதம் செலுத்தும் நபர்களுக்கு 800 சதுர அடி நிலம் தரப்படும். நிலம் வேண்டாம் என்றால் 12.5 சதவீத வட்டியோடு செலுத்திய பணம் தரப்படும் என அறிவிக்கப்பட்டது.