இஸ்லாமாபாத்: சீக்கியர்களுக்குரிய புனித தலமான கர்த்தார்புர் குருதுவாரா வரும் நவம்பர் 9ம் தேதி முதல் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்படும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார். சீக்கிய சமயத்தை தோற்றுவித்த முதல் குருவான குருநானக் தேவின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தியாவில் கர்த்தார்ப்புருக்கான பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்நிலையில் பாக்கிஸ்தானும் அதிகார பூர்வமாக நவம்பர் 9ம் தேதி கர்த்தார்புர் திறக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து சீக்கியர்கள் இங்கு விசா இல்லாமல் யாத்திரை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.