குடியை விட மறுத்த கணவனால் விரக்தி விஷம் குடித்த மனைவி பலி: மகனுக்கு தீவிர சிகிச்சை

சென்னை: குடியை விட கணவன் மறுத்ததால் விரக்தியடைந்த மனைவி விஷம் குடித்து இறந்தார். மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மதுரவாயல் நெற்குன்றம் மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் வசந்தகிருஷ்ணன் (30). இவரது மனைவி திவ்யா (27). இவர்களது மகன் லட்சுமிபிரசாத் (9). வசந்த கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், வசந்த கிருஷ்ணன் வீட்டை விட்டு வெளியேறி, ஈக்காட்டுத்தாங்கலில் வசித்து வருகிறார்.

இதனால், மனமுடைந்த திவ்யா, நேற்று முன்தினம் மகனுக்கு விஷத்தை கொடுத்துவிட்டு, தானும் விஷம் குடித்தார். இருவரும் வீட்டில் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதனை செய்ததில் திவ்யா இறந்தது தெரிந்தது. மயக்கநிலையில் இருந்த குழந்தை லட்சுமி பிரசாத்துக்கு எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார், திவ்யா சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: