சேலம்: சேலம் மாவட்டம் கோனேரிக்கரையில் தனியார் பார்சல் நிறுவனத்தில் இருந்து 1,500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. உத்தரபிரதேச மாநிலத்தில் பார்சல் லாரி மூலம் சேலத்துக்கு குட்கா பொருட்கள் கடத்திவரப்படுவதாக ஜிடைத்த தகவலை அடுத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். குட்கா பொருட்களை கடத்தியதாக ஆரிப், சித்திக் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.