அகமதாபாத்: புரோ கபடி லீக் தொடரின் 7வது சீசனில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. அகமதாபாத் இகேஏ அரங்கில் நேற்று நடந்த பரபரப்பான பைனலில் தபாங் டெல்லி கே.சி. - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இரு அணி வீரர்களும் முனைப்புடன் விளையாடி புள்ளிகளைக் குவித்ததால் ஆட்டத்தில் அனல் பறந்தது. இடைவேளையின்போது இரு அணிகளும் தலா 17 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன.
இரண்டாவது பாதியில் ஒருங்கிணைந்து ஆக்ரோஷமாக விளையாடிய பெங்கால் வாரியர்ஸ் அடுத்தடுத்து புள்ளிகளை அள்ளி முன்னேறியது.