பாரிஸ்: நிதி மோசடி மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை தடுக்கத் தவறியதால், பாகிஸ்தானை தொடர்ந்து கருப்பு பட்டியலில் வைக்க சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக்குழு (எப்ஏடிஎப்) முடிவு செய்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி செல்வதை, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக் குழு (எப்ஏடிஎப்) கண்காணித்து வருகிறது. தீவிரவாத அமைப்புகளுக்கு உதவும் ஈரான், வடகொரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை எல்லாம் இந்த அமைப்பு கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் நிதி மோசடியில் ஈடுபடுவது, நிதி திரட்டுவதை தடுக்க, 27 நடவடிக்கைகள் கொண்ட செயல் திட்டம் ஒன்றை எப்ஏடிஎப் கடந்தாண்டு பாகிஸ்தானுக்கு வகுத்து கொடுத்தது.