ரியாத்: சவுதி அரேபியாவில் புனித பயணம் மேற்கொண்ட வெளிநாட்டினர் 35 பேர், பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். சவுதி அரேபியாவில் தனியார் பேருந்து ஒன்று மதினாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டினரை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. மதினா நகரம் அருகே பேருந்து வந்தபோது, எதிர்பாராத விதமாக கனரக வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த வெளிநாட்டினர் 35 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.