பென்னாகரம்: ஒகேனக்கல்லில் நீர்வரத்து 6 ஆயிரம் கன அடியாக சரிந்ததால், பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டு பரிசல் இயக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். காவிரி நீர்பிடிப்பு பகுதி மற்றும் கேரளா வயநாடு, கர்நாடக மாநிலங்களில் கடந்த 5 மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு பரிசல் இயக்க, மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இந்த தடை விதிப்பால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில், ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் 7 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இதனால் பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி உத்தரவிட்டார். ஆனால் பரிசல் ஓட்டிகள், தங்களுக்கு நிவாரணம் கோரி பரிசல் இயக்காமல் போராட்டம் நடத்தினர்.