மத்திய பிரதேசம்: அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரை கவனிக்க மருத்துவர்கள் வராததால் அவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தின் சிவ்பூர் பகுதியை சேர்ந்தவர் பாலசந்திர லோடி(50). இவர் காச நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் நேற்று காலை சிவ்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். பாலசந்திர லோடி அங்கு அனுமதிக்கப்பட்ட 5 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக அந்த வார்ட்டில் இருந்த பிற நோயாளிகள் தகவல் அளித்துள்ளனர். எனினும் மருத்துவர்கள் யாரும் பாலசந்திர லோடியை பார்க்க வரவில்லை. இதனால் அவரின் கண்களில் எறும்புகள் மொய்க்க ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து லோடியின் மனைவி அவரது கண்களில் மொய்த்து கொண்டிருந்த எறும்புகளை அகற்றி உள்ளார்.