சென்னை: ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் போதை சாக்லெட் கடத்தி வந்து சென்னை முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஒடிசா மாநிலத்தில் இருந்து நேற்று எழும்பூர் ரயில் நிலையம் வந்த ஹவுரா விரைவு ரயிலில், 2 வட மாநில இளைஞர்கள் சென்னை வந்தனர். எழும்பூர் போலீசார் சந்தேகத்தின் பேரில், அவர்களை பிடித்து, அவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது, அதில், போதை சாக்லெட்கள், ஹான்ஸ் பாக்கெட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது. உடனே, போலீசார், அவர்கள் 2 பேரையும் காவல் நிலையம் அழைத்து ெசன்று விசாரணை நடத்தினர். அதில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரகாஷ் பிரதான் (26) மற்றும் ருத்து ஹேம்ராம் (18) என்றும், இருவரும் பெருங்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.