லண்டன்: ஆங்கில நாவல்களுக்கான உயரிய விருதான, ‘புக்கர் பரிசு’ இம்முறை இரு பெண் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பிரசுரிக்கப்பட்ட மற்றும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட நாவல்களுக்கு ஆண்டுதோறும் உயரிய, புக்கர் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான புக்கர் விருது, கனடா எழுத்தாளர் மார்க்ரெட் அட்வுட் மற்றும் இங்கிலாந்து எழுத்தாளர் பெர்னார்டைன் எவரிஸ்டோ ஆகியோருக்கு கூட்டாக வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக இவ்விருது ஒரு எழுத்தாளருக்கு மட்டுமே வழங்கப்படும். கடைசியாக 1992ல் இரு எழுத்தாளர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு, இந்த விதிமுறை மாற்றப்பட்டு, ஒருவருக்கு மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆங்கில நாவல்களுக்கான உயரிய விருது இரு எழுத்தாளர்களுக்கு புக்கர் பரிசு அறிவிப்பு
- ஆண்டின் இரண்டு எழுத்தாளர்களுக்கான புக்கர் பரிசு அறிவிப்பு
- நாவல்கள்.
- புக்கர் பரிசு ஆண்டுவிழா ஆண்டின் இரண்டு எழுத்தாளர்கள் விருது