கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் வாகன சோதனையின் போது தம்பதியினரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக சிறப்பு எஸ்.ஐ ஒருவரையும், காவலர் ஒருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காவல் கண்காணிப்புக்குட்பட்ட மேலவீதி கஞ்சித்திட்டு பகுதி அருகே நேற்று முன்தினம் சிறப்பு எஸ்.ஐ வேல்முருகன் மற்றும் மரிய சார்லஸ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புவனகிரியிலிருந்து இருசக்கர வாகனத்தில் நான்கு பேர் பயணித்துள்ளனர். அவர்களை மடக்கிய காவல் துறையினர் தம்பதியினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆவணங்களை சரிபார்க்கும் பொருட்டு ஒரிஜினல் ஆவணத்தை தரும்படி கூறியுள்ளார்.